கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக கணினித் துறையில் தான் கற்றறிந்த விஷயங்களை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டி நூல்களாக வடிவமைத்து சென்னை
கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள் தற்பொழுது இந்தியா மட்டுமின்றி
அமெரிக்கா, மலேசியா, போன்ற வெளிநாடுகளிலும் விற்பனையாகி வருகின்றன. இவர் எழுதிய
ஃபாண்டோகிராப்பர் என்ற நூலிற்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி மேதகு
டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் பாராட்டு வழங்கியிருக்கிறார்.இவர் எழுதிய கணினித் தமிழ் நூல்களை சிறந்த கணினித் தமிழ் நூல்கள் என ஆய்வு செய்த பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளையும் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவில்
சிறந்த கணினித் தமிழ் நூல்கள் என்னும் விருதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மூலம் வழங்கியுள்ளது.
திருநெல்வேலி
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலும், திருச்சி
ஈ.வெ.ரா.கல்லூரியிலும் இவர்
தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களுக்கு கணினியில் மல்டிமீடியா பற்றி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.
மக்கள் தொலைக்காட்சியிலும்
கிராபிக்ஸ்
மற்றும் அனிமேஷன் பற்றிய கருத்தரங்கை நிகழ்த்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்களான அப்பலோ கம்ப்யூட்டர் எஜிகேஷன், சி.எஸ்.சி. போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு மாணவர் மாணவியர்களுக்கு மல்டி மீடியா பற்றிய வகுப்புகள் நிகழ்த்தியுள்ளார். மேலும் நெல்லை, மதுரை, திருச்சி, பெங்களூர் போன்ற இடங்களிலும் கணினித் தமிழ் வகுப்புகள் நிகழ்த்தி வருகிறார்.